26 Sept 2015

இறைவா ஓ! இறைவா

வெள்ளாவி வெளியில் தவழ்ந்திடும் முன்
கரும்புகை அதனில் சூழ்ந்தனவோ..
இடியொலிக் காதினில் கேட்டிடும் முன்
மின்னொளி மண்ணைத் தாக்கியதோ..
முகில் கூட்டம் முற்றிலும் முதிர்ந்திடும் முன்
மயிலும் ஆடி தோகை விரித்திட்டதோ..
தீம்புனல் தென்றலை தீண்டிடும் முன்
குயிலும் கூவி மகிழ்ந்து குலாவியதோ..

இறைவா!
ஓ.. இறைவா!!
இதைப் போல் அதிசயம்
இன்றேனும் நிகழாதோ?!
ஏர் பிடிக்க காத்திருந்தனன் இவன்
ஏக்க தாகங்களும் தீராதோ?!

விவசாயி இன்னும் இருக்கையிலே
விவசாயம் முற்றிலும் அழிந்திட்டதோ..
மழைத்துளி மண்ணில் விழுந்திடும் முன்
உயிர்த்துளி அவனியில் வீழ்ந்திட்டதோ..

இறைவா!
ஓ.. இறைவா!!
இயற்கையின் இயக்கம்
முறை பிறழ்ந்ததுவோ?!
நீதி தேவதை கண்களைப் போல்
நீயும் இருளில் கட்டுண்டாயோ?!?!

No comments:

Post a Comment