26 Apr 2014

காப்பான் கண்ணன்

சரியெனும் தவறிலும்
சரிவில் தவறும் சரியிலும்
சர்வம் காக்க கண்ணன் வருவான்..!

வாட்டம் கூட்டி; வலிகளில் துவளும்
வாழ்க்கையின் இருள்சூழ் அறையில்
வாயிற்கதவாய் கண்ணன் காப்பான்..!

காணாதக் கானல் கண்ணீரிலும்
கண்டுவிட்ட மனதின் மென்சோகத்திலும்
எண்ணங்களின் குழப்பம் துடைக்கவே
கண்ணன் தன் வருடும் விரற்கொண்டு
உன்னை அணைக்க மலர்ந்து நிற்பான்..!

வருந்தாதே மனமே கலங்காதே..
வருவான் கண்ணன் துணையாகவே..!