10 Feb 2015

அருள் தேவி




அடிமுடி இல்லாத நாதனிடம் - நீயும்
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!


இலக்கியம் பலவும் உள்ளதடி - அவை
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன் 
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!

செந்தேனில் தெளிந்திடும் சுவையைப்போல - ஏகன் 
சீரோனில் ஒன்றிடக் கலந்தாயடி..
சிதறிய சிந்தையும் தெளிவடைய - உந்தன்
செந்தாள் வணங்கி நின்றேனடி..!