அடிமுடி இல்லாத நாதனிடம் - நீயும்
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!
இலக்கியம் பலவும் உள்ளதடி - அவை
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன்
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன்
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!
செந்தேனில் தெளிந்திடும் சுவையைப்போல - ஏகன்
சீரோனில் ஒன்றிடக் கலந்தாயடி..
சிதறிய சிந்தையும் தெளிவடைய - உந்தன்
செந்தாள் வணங்கி நின்றேனடி..!