வேதச்சொற்கள்
About Me
Vedharaman
View my complete profile
26 Sept 2015
இறைவா ஓ! இறைவா
வெள்ளாவி வெளியில் தவழ்ந்திடும் முன்
கரும்புகை அதனில் சூழ்ந்தனவோ..
இடியொலிக் காதினில் கேட்டிடும் முன்
மின்னொளி மண்ணைத் தாக்கியதோ..
Read more »
9 Aug 2015
உலகில் ஓர் ஓரறிவு
என்றாயினும் யானும் நல்லவர்களைக் கண்டுவிட
எந்நாளும் புரிகிறேன் ஒற்றைக்காலில் தவம்..
ஆயினும் எங்கும் மனிதர்களே தென்படுகின்றனர்..!
Read more »
24 Mar 2015
வீடு
சொந்த வீட்டில்
வாடகைக்குக் குடியமர்தல்..
மாதத்தவணைக் கடனில்
அடுக்குமாடிக் குடியிருப்பில்..!
10 Feb 2015
அருள் தேவி
அடிமுடி இல்லாத நாதனிடம் - நீயும்
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!
இலக்கியம் பலவும் உள்ளதடி - அவை
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன்
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!
செந்தேனில் தெளிந்திடும் சுவையைப்போல - ஏகன்
சீரோனில் ஒன்றிடக் கலந்தாயடி..
சிதறிய சிந்தையும் தெளிவடைய - உந்தன்
செந்தாள் வணங்கி நின்றேனடி..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)