26 Sept 2015

இறைவா ஓ! இறைவா

வெள்ளாவி வெளியில் தவழ்ந்திடும் முன்
கரும்புகை அதனில் சூழ்ந்தனவோ..
இடியொலிக் காதினில் கேட்டிடும் முன்
மின்னொளி மண்ணைத் தாக்கியதோ..

9 Aug 2015

உலகில் ஓர் ஓரறிவு

என்றாயினும் யானும் நல்லவர்களைக் கண்டுவிட
எந்நாளும் புரிகிறேன் ஒற்றைக்காலில் தவம்..
ஆயினும் எங்கும் மனிதர்களே தென்படுகின்றனர்..!

24 Mar 2015

வீடு

சொந்த வீட்டில்
வாடகைக்குக் குடியமர்தல்..
மாதத்தவணைக் கடனில்
அடுக்குமாடிக் குடியிருப்பில்..!

10 Feb 2015

அருள் தேவி




அடிமுடி இல்லாத நாதனிடம் - நீயும்
இடமொரு பாகமாய் நின்றாயடி..
ஆடி அடங்கிடும் வாழ்க்கைதனில் - ஒரு
பிடித்தமாய் வந்தருள் புரிவாயடி..!


இலக்கியம் பலவும் உள்ளதடி - அவை
இலக்குமி நின்புகழ் சொல்லுமடி..
கலங்கரை விளக்காய் காப்பாயடி - எந்தன் 
கலங்கிய மனத்துயர் தீர்ப்பாயடி..!

செந்தேனில் தெளிந்திடும் சுவையைப்போல - ஏகன் 
சீரோனில் ஒன்றிடக் கலந்தாயடி..
சிதறிய சிந்தையும் தெளிவடைய - உந்தன்
செந்தாள் வணங்கி நின்றேனடி..!