11 Oct 2016

நிழல்கள்

சயனங் கொள்ளாதோர் வாகனத்தில்
அயனம் அறியாதோர் பயணத்தில்
இரவியின் வெளிச்சத்திலும்
இரவின் நீள் பாதையிலும்
விலகாத நிழல்கள்..
அல் பொழுதின் இருளையும்
இல்லாது செய்திடும்
இடைவெளி கொண்டு நீளும்
சாலையொளி விளக்கின்கீழ்
விட்டு விட்டு வந்தாலும்
தொட்டுக் கொண்டே கூடவரும்..
ஒளியிருப்ப
விளியாமல் வரும்..
வழி முழுதும்
தொழியாமல் தொடரும்..!
உடல் நீங்கா நிழல்போல்
உயிர் நீங்கா நின்றவள்..
பிரகாசிக்கும் எண்ணங்களில்
பிரதிபலிக்கும் நினைவுகள்..
வாழ்க்கைப் பயணம் முடியும் மட்டில்
ஆழ்மனம் விட்டு என்றுமகன்றிடா நிழல்கள்..!

No comments:

Post a Comment