உறைந்த அதிகாலையில்
உருகிய பனிக்கட்டிகள்
பெருமழையினை வரவேற்றிடும் தூறல்கள்..
குளிரில் நனையும்
வீதியினைக் கடக்கையில்
ஏதோவோர் வீட்டின் முகப்பில்
கண்டேன் கோலங்கள் பல வண்ணங்களில்..
ரசிக்கலானேன்
மனமும் புலனும் புணர்ந்த
உணர்வின் எண்ணங்களோடு..
அவளை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்..!
கவனம் கவர்ந்தீர்க்கும்
இறுதிப் பக்கங்கள் இல்லாதொரு நாவல்
மனம் முழுதும் மிகுந்தாவலில்
உள்ளது மட்டும் இசைந்து படிக்கலானேன்..
அவளை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்..!
மழையோ வெய்யிலோ
இத்தருணத்தின் அழகு
ரசனையின் வெளிப்பாடன்றி
கோலத்தின் நிலையாமையல்ல...
அவளை நான் காதலித்துக் கொண்டிருந்தேன்
இறுதி அத்தியாயத்தினை
கற்பனையில் எழுதிவிட்டு!!!!
உருகிய பனிக்கட்டிகள்
பெருமழையினை வரவேற்றிடும் தூறல்கள்..
குளிரில் நனையும்
வீதியினைக் கடக்கையில்
ஏதோவோர் வீட்டின் முகப்பில்
கண்டேன் கோலங்கள் பல வண்ணங்களில்..
ரசிக்கலானேன்
மனமும் புலனும் புணர்ந்த
உணர்வின் எண்ணங்களோடு..
அவளை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்..!
கவனம் கவர்ந்தீர்க்கும்
இறுதிப் பக்கங்கள் இல்லாதொரு நாவல்
மனம் முழுதும் மிகுந்தாவலில்
உள்ளது மட்டும் இசைந்து படிக்கலானேன்..
அவளை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன்..!
மழையோ வெய்யிலோ
இத்தருணத்தின் அழகு
ரசனையின் வெளிப்பாடன்றி
கோலத்தின் நிலையாமையல்ல...
அவளை நான் காதலித்துக் கொண்டிருந்தேன்
இறுதி அத்தியாயத்தினை
கற்பனையில் எழுதிவிட்டு!!!!
No comments:
Post a Comment