10 Sept 2016

பித்தன்

சித்தம் கலங்கிய நிலைபோல
சிதிலம் கண்டு,
அமிலத்தில் அமிழ்ந்திய முகம்போல
பாழ் அடைந்து,
மறுவுரு பெற முடியாஅ
கையறு நிலையிலும்
எந்தன்
காதல் மாளிகை
இன்னும்
ஜீவித்துக் கொண்டிருக்கிறது;
சிலந்திபோல் அவள்
நினைவுகளின் நடமாட்டத்தால்...
எந்தன் ஆகிருதி முழுதும்
ஆக்கிரமித்து,
எண்ணங்களை மென்று தின்று,
அதன் எச்சிலால் பின்னப்பட்ட
வலைகளுக்குள் சிக்கி,
ஆனந்த அமைதியில்
ஆழ்ந்துள்ள பிரக்ஞை..
பித்தனென்று நீங்கள்
நினைப்பதைப் பற்றி
ஏன் கவலையிடப் போகிறது?

No comments:

Post a Comment