அந்தக் கவிதையில்
எதுகை இல்லை
மோனை இல்லை
காதலையும் கூறவில்லை..
அது அவளறியும்
மொழியிலுமில்லை...
இன்னும் சொல்லப் போனால்
அதில் எதுவுமே எழுதப்படவில்லை...
முதல் கடிதமே
அவளுக்கு
இப்படித்தான் தரப்பட்டது..
அதைப் பிரித்துப் படித்தாள்..
ஆம்,
ஒன்றுமே இல்லாதவற்றுள்
இருக்கும் எல்லாவற்றையும்
புரிந்து கொண்டுவிட்டாள்..
குனித்து தரைதொடும் பார்வையில்
கனிந்து உதிர்ந்தது ஒற்றை புன்னகை..
அந்த வெள்ளைக் காகிதம்
காதல் கடிதமாய் மாறியது!
எதுகை இல்லை
மோனை இல்லை
காதலையும் கூறவில்லை..
அது அவளறியும்
மொழியிலுமில்லை...
இன்னும் சொல்லப் போனால்
அதில் எதுவுமே எழுதப்படவில்லை...
முதல் கடிதமே
அவளுக்கு
இப்படித்தான் தரப்பட்டது..
அதைப் பிரித்துப் படித்தாள்..
ஆம்,
ஒன்றுமே இல்லாதவற்றுள்
இருக்கும் எல்லாவற்றையும்
புரிந்து கொண்டுவிட்டாள்..
குனித்து தரைதொடும் பார்வையில்
கனிந்து உதிர்ந்தது ஒற்றை புன்னகை..
அந்த வெள்ளைக் காகிதம்
காதல் கடிதமாய் மாறியது!
No comments:
Post a Comment